5 மாதங்களாக நிதியின்றி திண்டாடும் கிராம பஞ்சாயத்துகள்: அரசு கண்டுகொள்ளுமா?
சென்னை: தமிழகத்தில் உள்ள கிராம பஞ்சாயத்துகளுக்கு கடந்த 5 மாதங்களாக ஊழியர்கள் ஊதியம் மற்றும் அடிப்படை தேவைகளுக்கு நிதியுதவி ஒதுக்கீடு செய்வதை அரசு நிறுத்தியதால் புதிய தலைவர்களுக்கும், பொது மக்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
தமிழகத்தில் உள்ள 10,000க்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகளுக்கு மாதாந்திர நிதி ஒதுக்கீடு செய்வதை அரசு நிறுத்தியுள்ளது. கடந்த 5 மாதங்களாக பஞ்சாயத்துகளில் பணியாற்றும் எழுத்தர், துப்புரவு பணியாளர்கள், பம்ப் ஆபரேட்டர்கள் என மாநிலம் முழுவதும் சுமார் 50,000க்கும் மேற்பட்டோருக்கு ஊதியத்துக்கான நிதி வழங்காமலும், அடிப்படை வசதிகளான சுகாதாரத்தை பேணுதல், பழுதான குடிநீர் குழாய்களை சீரமைத்தல், அடிபம்புகள் மற்றும் மின் மோட்டார்கள் வசதியுடன் கூடிய குடிநீர் தொட்டிகள் பழுதுகளை சீரமைக்க எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை.
இதனால் உள்ளாட்சி தேர்தலுக்கு முன் முந்தைய தலைவர், எழுத்தரிடம் மக்கள் கோரிக்கை வைத்தும் அப்பணி நடைபெறவில்லை. தற்போது உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற புதிய தலைவர்கள் பொறுப்பேற்ற நிலையில் மேற்கூறிய பஞ்சாயத்து அடிப்படை வசதி பணிகள் செய்யக்கோரி வாக்களித்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு நிதி ஒதுக்கீடு செய்யாத நிலையில் புதிய தலைவர்கள் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற முடியாமல் திணறி வருவதுடன் புகார்களை தெரிவிக்க வரும் பொதுமக்களை கண்டால் ஓடி ஒளியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை 19 யூனியன் அலுவலகங்களில் செயல்பட்டு வரும் 425 பஞ்சாயத்துகளில் 90 சதவீதத்திற்கும் மேலான பஞ்சாயத்துக்கள் நிதிப்பற்றாக்குறையில் சிக்கி தவிக்கின்றன.












Click it and Unblock the Notifications