சிறுநீரகங்கள் பழுதாகி உயிருக்கு போராடும் ஏழை மாணவி: பெற்றோர்கள் கண்ணீர்

Subscribe to Oneindia Tamil

Manidevi
நெல்லை: 5ம் வகுப்பு மாணவி மணிதேவி என்ற மணிமேகலையின் சிறுநீரகங்கள் பழுதாகியுள்ளன. இதனால் அவர் உயிருக்கு போராடி வருகிறார். கருணை உள்ளம் படைத்த யாரேனும் நிதியுதவி செய்து தன் உயிரைக் காப்பாற்றிவிட மாட்டார்களா என்று அந்த ஏழை மாணவி எதிர்பார்க்கிறாள்.

பாவூர்சத்திரம் அருகே உள்ள மடத்தூர் வெண்ணியூரைச் சேர்ந்தவர் ஆத்தியப்பன். கூலி வேலை செய்து வருகிறார். அவரது மனைவி விஜயா. பீடி சுற்றும் தொழிலாளி. அவர்களுக்கு மணிதேவி என்ற மகளும், செல்லமணி, மதியழகன் என்ற மகன்களும் உள்ளனர்.

இதில் மணிதேவி மடத்தூர் இந்து நடுநிலைப்பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார். மணிதேவிக்கு உடல் வளர்ச்சி இல்லாததால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆனாலும் அவரது உடல் நாளுக்கு நாள் மெலிந்து நடக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் மணிதேவியின் சிறுநீரகங்கள் முழுமையாக செயல்படவில்லை. இன்னும் 6 மாதங்களுக்குள் மணிதேவிக்கு மாற்று சிறுநீரகங்கள் பொருத்தினால்தான் அவரை காப்பாற்ற முடியும் என்று கூறிவிட்டனர்.

இந்நிலையில் கூலி வேலை செய்யும் பெற்றோர் மகளை எப்படி காப்பாற்றுவது என கவலையில் உள்ளனர். தங்கள் மகளைக் காப்பாற்ற யாரும் உதவமாட்டார்களா என்று ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர்.

தொடர்புக்கு...

இந்தச் சிறுமிக்கு உதவ விரும்புவோர் 7845101470 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு மேல் விவரம் அறியலாம்.

முகவரி:

A.மணிதேவி
D/o R. ஆத்தியப்பன்
ராமசாமி கோவில் தெரு,
வெண்ணீயூர்,
குணராமநல்லூர் போஸ்ட்
தென்காசி தாலுகா
திருநெல்வேலி மாவட்டம்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+