2ஜி வழக்கு: சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய விரும்பவில்லை-ராசா மனு-நீதிபதி நிராகரிப்பு

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் இன்று சாட்சிகள் விசாரணை தொடங்கியது. அப்போது ராசாவின் வக்கீல் சுஷில் குமார் ஒரு கோரிக்கை மனுவை நீதிபதியிடம் சமர்ப்பித்தார். அதில், 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகார வழக்கில் 2009ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதி சிபிஐ விசாரணை தொடங்கியது. இந்த விசாரணை முடிந்து, சிஆர்பிசி சட்டம் 244வது பிரிவின்படி அனைத்து வாக்குமூலங்களும் தாக்கல் செய்யப்பட்டு விட்ட பின்னர்தான் சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய முடியும்.
ஆனால், லூப் டெலிகாம் மீதான விசாரணை இன்னும் முடிவடையவில்லை என்று சிபிஐ உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. எனவே அந்த விசாரணை முடியும் வரை மனுதாரர் (ராசா) அரசுத் தரப்பு சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய விரும்பவில்லை.
குற்றம் சாட்டப்பட்ட 17 பேர் மீதான விசாரணை முடிவடைந்து விட்டதா என்று சிபிஐயிடம் கோர்ட் விளக்கம் கேட்க வேண்டும் என்று கோரியிருந்தார் ராசா. இருப்பினும் இந்த மனுவை நீதிபதி ஷைனி நிராகரித்து விட்டார்.
அதன் பின்னர் சாட்சிகளிடம் விசாரணை தொடங்கியது.












Click it and Unblock the Notifications