இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை இல்லை

Subscribe to Oneindia Tamil

ஜகார்த்தா: இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியான மலுக்கு மாகாணத்தில் இன்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை.

இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியான மலுக்கு மாகாணத்தில் இன்று காலை 11.05 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவானது. லபுஹா நகரின் தென்மேற்கில் இருந்து 69 கிமீ தொலைவில் உள்ள இடத்தை மையமாகக் கொண்டு இந்த நிலநடு்ககம் ஏற்பட்டது என்று இந்தோனேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் சேதம் ஏதும் ஏற்பட்டுள்ளதா என்ற தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை. இதன் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை.

லபுஹா அருகில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அதிர்வுகள் அருகில் உள்ள டெர்னேட் நகரத்தில் உணரப்பட்டது.

கடந்த மாதம் பாலியில் 6.0 அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலர் காயம் அடைந்தனர், சுற்றுலாப் பயணிகள் பீதியில் ஓட்டம் பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+