3 நாள் அரசு விடுமுறை: திருப்பதி கோவிலில் இலவச தரிசனத்துக்கு 12 மணி நேரமாகிறது
திருப்பதி: 3 நாட்கள் தொடர்ந்து அரசு விடுமுறையாக வந்ததால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. இலவச தரிசனம் பெற பக்தர்கள் 12 மணிநேரம் வரை காத்திருந்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு இந்தியா மட்டுமின்றி உலகமெங்கும் இருந்து பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். வழக்கமாக சனி, ஞாயிறு நாட்களில் கோவிலில் கூட்டம் அதிகமாக காணப்படும். இந்த நிலையில் கடந்த சனி, ஞாயிறு மற்றும் இன்று குழந்தைகள் தினத்தையும் சேர்த்து 3 நாட்கள் தொடர்ந்து அரசு விடுமுறையாக வந்துள்ளது.
இதனால் திருப்பதி கோவிலில் தரிசனத்துக்காக வரும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்தது. வைகுண்டம் வரிசையில் 21 வரிசைகளும் பக்தர்களால் நிரம்பியது. இதனால் இலவச தரிசனம் பெற வந்த பக்தர்கள் சுமார் 12 மணிநேரம் காத்திருத்தனர். இலவச தரிசனத்துக்கு வரிசையில் நின்ற பக்தர்களுக்கு உணவு, தண்ணீர் ஆகியவை விநியோகிக்கப்பட்டன.
ரூ.50, ரூ.300 சிறப்பு தரிசனம் பெற 3 மணிநேரம் காத்திருந்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் மகாலகு தரிசனத்துக்கு தேவஸ்தானம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications