தமிழகத்தில் 7 புதிய போக்குவரத்து காவல் நிலையங்கள் அமைக்க ஜெ. உத்தரவு
சென்னை: தமிழகத்தில் 7 போக்குவரத்து காவல் நிலையங்கள் அமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாட்டில் பெருகி வரும் சாலை விபத்துக்களையும், அதனால் ஏற்படும் இழப்புகளையும் கருத்தில் கொண்டு போக்குவரத்து தொடர்பான காவல்பணிகளை செய்வதற்கு புதிதாக 5 போக்குவரத்துக் காவல்நிலையங்கள் அமைக்கப்படும்.
இதன்படி, காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல், தேனி மாவட்டம் போடிநாயக்கனூர், கன்னியாகுமரி மாவட்ட பத்மநாபபுரம் ஆகிய இடங்களில் இந்த புதிய போக்குவரத்துக் காவல்நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.
இந்தக் காவல் நிலையங்களில் பணிபுரிவதற்காக 5 ஆய்வாளர்கள், 10 சார் ஆய்வாளர்கள், 15 தலைமைக் காவலர்கள் என மொத்தம் 80 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னைக்கு 2
சென்னை காவல் துறைக்கு உட்பட்ட வளசரவாக்கம், செம்மஞ்சேரியில் இரண்டு போக்குவரத்து காவல் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாகவும் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இந்த புதிய காவல்நிலையங்களால் தமிழக அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு 2 கோடியே 71 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications