சிதம்பரத்தில் அரசுப் பள்ளி விடுதியில் +2 மாணவர் தூக்கு போட்டு தற்கொலை
சிதம்பரம்: சிதம்பரத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றின் விடுதியில் +2 மாணவர் ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிதம்பரத்தில் உள்ள நந்தனார் அரசு ஆண்கள் பள்ளியில் மாணவர்கள் தங்கும் விடுதி உள்ளது. அந்த விடுதியில் தங்கி +2 படித்து வந்தார் விமல்ராஜ்(18). அவர் திடீர் என்று விடுதியின் உணவுக் கூட அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதைப் பார்த்த மற்ற மாணவர்கள் இது குறித்து பள்ளி நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர். பள்ளி நிர்வாகம் இது குறித்து சிதம்பரம் காவல் நிலையத்திற்கு தெரிவித்தது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவர் விமல்ராஜ் உடலை கைப்ற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவர் விமல்ராஜ் தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசுப் பள்ளி விடுதியில் மாணவர் ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications