கனமழை: திருவாரூர், புதுக்கோட்டை பள்ளிகளுக்கு இன்று விடுமுறை- மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
திருவாரூர்: கன மழை காரணமாக இன்று திருவாரூர், புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து தமிழகம் முழுக்க மழை கொட்டித் தீர்த்தது. இதனால் தெருவெல்லாம் வெள்ளக்காடாக காட்சியளித்தது. பின்பு மழையின் தீவிரம் சற்று குறைந்திருந்தது.
இந்த நிலையில் மழையின் தீவிரம் மீண்டும் அதிகரித்துள்ளது. திருவாரூர் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளி்ல் கனமழை பெய்வதால் அம்மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று புதுக்கோட்டை மாவட்டத்திலும் கனமழையை பெய்து வருவதால் அங்குள்ள பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications