உபி மக்களை பிச்சைக்காரர்கள் என்று கூறிய ராகுல்காந்திக்கு எதிராக கிரிமினல் வழக்கு

உத்தரபிரதேச மாநிலம் புல்புரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி பேசினார். அப்போது, உத்தரபிரதேச வாலிபர்கள் வேலைக்காக பிச்சைக்காரர்களைப்போல மகாராஷ்டிரா மாநிலத்திடம் கையேந்துகிரார்கள் என்று தெரிவித்தார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த பவதோஷ் குர்ஜர் என்பவர் இந்திய குற்றப்பிரிவு தண்டனைச்சட்டம் 200 ன் கீழ் காங்கிஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்தியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உள்ளூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கிற்கான ஆவணங்களை நவம்பர் 21-ம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சண்டிகரில் வழக்கு
இதேபோல் ராகுல் காந்திக்கு எதிராக அவர் மீது சண்டிகாரில் உள்ள தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. உலகளாவிய மனித உரிமை கவுன்சிலை சேர்ந்த அரவிந்த் தாக்குர், சிவமூர்த்தி யாதவ் ஆகியோர் இம்மனுவை தாக்கல் செய்துள்ளனர். வாழ்வாதாரத்துக்காக வேறு மாநிலங்களில் வாழும் உத்தரபிரதேச மக்களைப் பற்றி தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தியதாக, ராகுல் காந்தி மீது அம்மனுவில் குற்றம் சாட்டியுள்ளனர்.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து












Click it and Unblock the Notifications