'வறுமை தெரியாத, பேருந்தில் பயணிக்காத கூட்டத்துக்கு கட்டண உயர்வின் சுமை புரியாதுதான்!'

அந்தத் தொழிலாளியின் பெயர் செந்தில். திருவண்ணாமலை காரப்பட்டு கிராமத்திலிருந்து சென்னை வந்து கட்டட வேலை செய்பவர். மனைவி மற்றும் இரு குழந்தைகள் இவருக்கு உள்ளனர்.
துரைப்பாக்கத்தில் தங்கி கட்டட கூலியாக வேலை பார்த்து வருகிறார்.
சில தினங்களுக்கு முன் ஊருக்குப் போன அவர் நேற்று சென்னை திரும்பினார். பஸ்ஸில் ஏறியபிறகுதான் டிக்கெட் கட்டணம் ஏற்றப்பட்ட விவரம் தெரிந்திருக்கிறது.
வழக்கமாக ரூ 100 கொடுத்தால் தாம்பரத்துக்கு இருவர் வந்துவிட முடியும். ஆனால் இப்போது தாறுமாறாக கட்டணம் ஏற்றப்பட்டுள்ளதால், அவர் ஊர் திரும்ப ரூ 200-க்கு மேல் ஆகிவிட்டதாம்.
வைத்திருந்த மொத்த பணத்தையும் கொடுத்து தாம்பரம் வரை டிக்கெட் எடுத்த செந்தில், தாம்பரத்தில் இறங்கியதும் தான் குடியிருக்கும் துரைப்பாக்கம் செல்ல போதிய பணமில்லாததைக் கண்டார்.
கொண்டு வந்திருந்த மூட்டையை தலையில் சுமந்து கொண்டு மனைவி- குழந்தைகள் இருவருடன் நடந்தே செல்ல ஆரம்பித்துவிட்டார்.
நடந்து கொண்டே, இந்த அம்மா வந்தா நம்மை காப்பாற்றுவார், வருமானத்துக்கு வழி பிறக்கும்னு பாத்தா, இருக்கிறதையும் பிடுங்கிட்டு தெருவில் அல்லாட விட்டுட்டாங்களே!, என்று வேதனையுடன் புலம்பியபடி சென்றார்.
இதைக் கவனித்த சில லோக்கல் நிருபர்கள் அவரை நிறுத்தி விஷயத்தைக் கேட்க, அவர் திருவண்ணாமலையிலிருந்து தான் புறப்பட்டு வந்த கதையைச் சொல்லிவிட்டு, நடையைத் தொடர்ந்தார்!
இன்னும் எத்தனைப் பேர் இப்படி நடைப்பயணத்தை மேற்கொண்டார்களோ என்ற கேள்வியுடன் திரும்பினர் நிருபர்கள்.
விலைவாசியை ஜெயலலிதா உயர்த்தியதற்கு பாராட்டு தெரிவிக்கும் பசியறியா, நடையறியா, பேருந்துப் பயணம் அறியா, வியாதிக்காக மட்டுமே நடந்து பழகிய சொகுசு வர்க்கத்துக்கு இதெல்லாம் எங்கே தெரியப் போகிறது!
-
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர்












Click it and Unblock the Notifications