இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்கட்சி எம்.பிக்களைத் தாக்கிய ஆளுங்கட்சியினர்
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத்திற்குள் வைத்து ஆளுங்கட்சி எம்.பிக்கள் எதிர்கட்சியினரை தாக்கியுள்ளதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சே பட்ஜெட் குறித்த் உரை நிகழ்த்தினார். அப்போது அதற்கு எதிர்கட்சி எம்.பிக்கள் எதிர்ப்பு தெரிவி்த்தனர். அவர்கள் வாசகங்கள் அடங்கிய அட்டையை தூக்குப் பிடித்து காட்டி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
இதை பார்த்த ஆளுங்கட்சியினர் ஆத்திரமடைந்தனர். உடனே பாயந்து வந்து எதிர்கட்சியினர் கையில் இருந்த அட்டைகளைப் பறிக்க முயன்றனர். அட்டைகளைத் தர எதிர்கட்சியினர் மறுக்கவே இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
தகராறு முற்றி கைகலப்பாகிவிட்டது. இதையடு்தது எதிர்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். இதில் யாருக்கும் காயம் ஏற்பட்டதா என்று தெரியவில்லை.












Click it and Unblock the Notifications