நதிகள் இணைப்பை வலியுறுத்தி 3ம் தேதி சென்னை-புதுவைக்கு பாதயாத்திரை: குமரி அனந்தன்
சென்னை: நதிகள் இணைப்பை வலியுறுத்தி காந்தி பேரவை சார்பில் சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு வரும் 3ம் தேதி பாதயாத்திரை மேற்கொள்ளவிருப்பதாக அந்த பேரவையின் தலைவர் குமரி அனந்தன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூட்டம் சென்னையில் உள்ள பாரதியார் இல்லத்தில் நடந்தது. மயிலை பெரியசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் காந்தி பேரவை தலைவர் குமரி அனந்தன் பேசியதாவது,
அமெரிக்காவில் பெய்யும் அளவுக்கு இந்தியாவிலும் மழை பெய்கிறது. அப்படி இருக்கையில் அவர்கள் நம் நம்மைவிட 6 மடங்கு அதிக தண்ணீரை சேமிக்கின்றனர். நம் நாட்டிலோ ஒரு பக்கம் வெள்ள சேதம் மறுபக்கம் வரட்சி.
எனவே, நதிகள் இணைப்பை வலியுறுத்தி வரும் டிசம்பர் மாதம் 3ம் தேதி பாரதியார் இல்லத்தில் இருந்து புதுச்சேரிக்கு பாதயாத்திரை நடக்கிறது. இந்த யாத்திரையை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன் துவங்கி வைக்கிறார்.
நம் நாட்டில் கிடைக்கும் தண்ணீரில் வெறும் 31 சதவீதத்தை தான் பயன்படுத்துகிறோம். மீதமுள்ள 69 சதவீதம் கடலில் கலக்கிறது. தற்போது இந்தியாவில் 49.4 மில்லியன் ஹெக்டேர் நிலத்தில் பயிர் செய்யப்படுகிறது. இதுவே நதிகளை இணைத்தால் கூடுதலாக 35 மில்லியன் ஹெக்டேரில் பயிர் செய்ய முடியும். தற்போது நீர் மூலம் 22,438 மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது. அதுவே நதிகள் இணைக்கப்பட்டால் 1,48,700 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும்.
பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. நதிகள் இணைக்கப்பட்டால் நீர்வழிச்சாலை கிடைக்கும். ஒரு குதிரை சக்தியை கொண்டு தரையில் 150 கிலோ பாரத்தையும், ரயிலில் 500 கிலோ பாரத்தையும், நீர்வழியில் கப்பல் மூலம் 4,000 கிலோ பாரத்தையும் கொண்டு செல்லலாம். இவ்வாறு செய்வதன் மூலம் அந்நியச் செலவாணி மிச்சமாகும். அதனால் நதிகளை இணைப்பதே நாட்டின் நலனைப் பெருக்க உதவும் என்றார்.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications