சசி, இளவரசி, சுதாகரனிடம் 142 கேள்விகள் கேட்கிறது பெங்களூர் கோர்ட்-நவ. 29ல் விசாரணை
பெங்களூர் முதல்வர் ஜெயலலிதாவிடம் நடந்து வந்த விசாரணை முடிவடைந்துள்ளதைத் தொடர்ந்து அடுத்து சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரனிடம் விசாரணை நடைபெறவுள்ளது. இதற்காக இந்த மூவரும் நவம்பர் 29ம் தேதி ஆஜராக பெங்களூர் தனி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தவிர அவரது தோழி சசிகலா, முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன், சசிகலாவின் உறவினர் இளவரசி ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தற்போது ஜெயலலிதாவிடம் மட்டுமே விசாரணை முடிவடைந்துள்ளது. முக்கியக் குற்றவாளியாக ஜெயலலிதா சேர்க்கப்பட்டுள்ளதால் அவரிடம் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
நான்கு நாள் அவர் விசாரிக்கப்பட்டுள்ளார். அடுத்து சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரனிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது. இதற்காக மூவரும் வருகிற 29ம் தேதி ஆஜராக நீதிபதி மல்லிகார்ஜூனய்யா உத்தரவிட்டுள்ளார்.
ஜெயலலிதாவிடம் விசாரணை முடிவடைந்து விட்டதால் பரப்பனஅக்ரஹாராவில் அமைக்கப்பட்ட சிறப்பு கோர்ட்டும், தற்போது வழக்கமான பெங்களூர் சிவில் கோர்ட் வளாகத்திற்கே மாற்றப்பட்டுள்ளது.
நவம்பர் 29ம் தேதி மூவரும் அங்கு ஆஜராக வேண்டும். அவர்களிடம் கேட்பதற்கு 142 கேள்விகளை தனி நீதிமன்றம் தயாரித்துள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications