திமுக செயலாளர் பூண்டி கலைவாணன் மீதான குண்டர் சட்டம் செல்லாது - உயர்நீதிமன்றம்
சென்னை: திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் பூண்டி கலைவாணன் மீதான குண்டர் சட்டம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மற்ற வழக்குகளில் அவர் ஜாமீன் பெற்றுள்ளதால் விரைவில் அவர் விடுதலை ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருவாரூர் மாவட்ட தி.மு.க., செயலாளர் பூண்டி கலைவாணன் மீது பொதுச் சொத்தை சேதப்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு அவர் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்,
அவரை கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் பூண்டி கலைவாணன் மீதான குண்டர் சட்டம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது.
இரண்டாது நபர்
திமுகவினர் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் ரத்தானது இது இரண்டாவது முறையாகும். ஏற்கனவே மதுரையை சேர்ந்த பொட்டு சுரேஷ் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் செல்லாது என்று கடந்த வாரம் உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
இப்போது கலைவாணன் மீதான குண்டம் சட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் அவரும் விரைவில் ஜாமீனில் விடுதலை ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications