For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கடலூர் காவல் நிலையங்களுக்கு பெண் வரவேற்பாளர்கள் நியமனம்- எஸ்.பி. பகலவன் தகவல்

Google Oneindia Tamil News

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் வரவேற்பாளர்களை மாவட்ட எஸ்.பி. பகலவன் நியமித்துள்ளார்.

தமிழகத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் புகார் கொடுக்க வரும் பொதுமக்களை வரவேற்று, அவர்களுக்கு உதவ வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா சென்னையில் நடந்த கலெக்டர்கள் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் மாநாட்டில் அறிவுறுத்தினார்.

இதனையடுத்து சென்னையில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் வரவேற்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் 52 காவல் நிலையங்களுக்கும் வரவேற்பாளர்களை எஸ்.பி. பகலவன் நியமித்து உத்தரவிட்டார்.

நகரப் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களுக்கு தலா 2 வரவேற்பாளர்கள், கிராமப் பகுதியில் தலா ஒரு பெண் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வீதம் 56 பெண் போலீசார், 25 ஆண் போலீசார் என்று மொத்தம் 82 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் புகார் கொடுக்க வரும் பொதுமக்களிடம் எப்படி பழக வேண்டும், அவர்களுக்கு எப்படி உதவி செய்ய வேண்டும் என்பது குறித்து சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட உள்ளதாக எஸ்.பி. பகவலன் தெரிவித்துள்ளார்.

English summary
Cuddalore SP Pagalavan has appointed receptionists to 52 police stations in the district as per CM Jayalalithaa's instruction. The newly appointed receptionists will be given coaching about how to behave and help the people who approach them.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X