நிரம்பியது முல்லைப் பெரியார் அணை: வெள்ள அபாய எச்சரிக்கை
Subscribe to Oneindia Tamil

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள சர்ச்சைக்குரிய 116 ஆண்டு பழமை வாய்ந்த முல்லைப்பெரியாறு அணை நிரம்பியுள்ளது. அணையின் நீர்மட்டம் 136 அடியை தாண்டியுள்ளது. இதனால் அணையில் இருந்து உபரிநீ்ர் எந்நேரமும் வழியக்கூடும். தற்போது அணைக்கு வரும் 1502 கன அடி நீரை 14 மதகுகள் வழியாக வெளியேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
உபரிநீர் வெளியேற்றப்படுவதால் வண்டிப்பெரியார், வல்லக்கடவு, உப்புதுறை ஆகிய பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
அணை இருக்கும் இடுக்கி மாவட்டத்தில் அடிக்கடி லேசான நில அதிர்வுகள் ஏற்படுகின்றது. நேற்று கூட 2.7 என்ற அளவுக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. கடந்த ஜனவரி மாதம் முதல் நேற்று வரை இடுக்கியில் 21 தடவை லேசான நிலஅதிர்வுகள் ஏற்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications