ஒகனேக்கல் அருவியில் குதித்து பெண் உள்பட 3 பேர் தற்கொலை
ஒகனேக்கல்: தர்மபுரி மாவட்டம் ஒகனேக்கல் நீர்வீழ்ச்சியில் 3 பேர் குதித்துத் தற்கொலை செய்து கொண்டனர். அவர்களில் ஒருவர் பெண் ஆவார். இவர்களின் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை.
இந்த மூவரும் நேற்று ஒகனேக்கல் அருவிப் பகுதிக்கு வந்தனர். அங்குள்ள தொங்குபாலத்தில் டிக்கெட் வாங்கினர். பின்னர் அருவிக் கரைக்குச் சென்றனர். அங்கு சென்றதும் மூவரும் உள்ளே குதித்து விட்டனர்.
இதைப் பார்த்துப் பதறிய அக்கம் பக்கத்தினர் தீயணைப்புப் படையினருக்குத் தகவல் கொடுத்னர். இதையடுத்து விரைந்து வந்த தீயணைப்புப் படையினர், போலீஸார் மற்றும் நீச்சல் வீரர்கள் மூவரின் உடல்களையும் மீட்கும் முயற்சியில் இறங்கினர். இதில் பெண்ணின் உடல் மட்டும் கிடைத்தது.
அருவியில் குதித்து யாரேனும் மீட்டு விட்டால் உயிர் தப்பி விடுவோம் என்ற அச்சத்தில் மூவரும் விஷம் அருந்திய பின்னர் குதித்ததாக கூறப்படுகிறது.
இந்தத் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. அந்த மூவரும் யார் என்பதும் தெரியவில்லை.