கடும் நிதி நெருக்கடியிலும் 27 போயிங் விமானங்களை வாங்கும் ஏர் இந்தியா!

ரூ 43777 கோடி கடனில் தவிக்கிறது ஏர் இந்தியா. இந்தக் கடன் சுமையைக் குறைக்க மத்திய அரசின் நிதி உதவியை எதிர்ப்பார்த்து நிற்கிறது.
இந்த நிலையில், ஏர் இந்தியா இயக்குநர் குழு சமீபத்தில் கூடி சில முடிவுகளை எடுத்துள்ளது.
அதன்படி, கடனில் சிக்கித் தவிக்கும் ஏர் இந்தியா நிறுவனத்தை அதிலிருந்து மீட்கும் முயற்சியாக, இப்போது பெருமளவு பயன்படாத விமானங்களை விற்க அல்லது வாடகைக்கு விட முடிவு செய்துள்ளது ஏர் இந்தியா. ஏற்கெனவே ஏர் இந்தியா வாடகைக்கு எடுத்துள்ள விமானங்களுக்கான கட்டணத்தை மறுபரிசீலனை செய்யக் கோரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம ரூ 1500 கோடி வரை நிறுவனத்துக்கு மிச்சமாகும் என்று தெரிகிறது.
மேலும் போக்குவரத்தை வலுப்படுத்த, முக்கிய வழித்தடங்கள் புதிய விமானங்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கா 2006-ம் ஆண்டு வாங்குவதாக ஒப்பந்தம் போட்ட 27 'போயிங் 787' விமானங்களை, இப்போது வாங்கிவிடுவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications