திருச்சி மத்திய சிறையில் மரத்தில் இருந்து குதித்து கைதி தற்கொலை

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருச்சி மத்திய சிறையில் கைதி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி உறையூரைச் சேர்ந்தவர் பழனி செல்வம்(38). இவரை திருட்டு வழக்கு ஒன்றில் கைது செய்த போலீசார், நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர். இதனால் கடந்த 3 மாதங்களாக திருச்சி மத்திய சிறையில் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டு இருந்தார்.

இந்த நிலையில் சிறையில் வருகைப் பதிவேடு எடுக்கும் போது பழனி செல்வம் தாமதமாக வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்காக சிறை கண்காணிப்பாளர் அவரை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த பழனி செல்வம் திடீரென சிறையில் உள்ள மரத்தின் மீது ஏறி தலைகீழாக குதித்தார். இதில் படுகாயமடைந்த அவர் பரிதாபமாக உயிர் இழந்தார்.

இது குறித்து போலீசார் சக கைதிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தண்டனை கைதி ஒருவர் தற்கொலை செய்து கொண்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+