முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமசந்திரன் முன்ஜாமீன் பெற்றார்

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: மோசடி வழக்கில் சிக்கிய முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்வி அறக்கட்டளையில் மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் காவல்துறையினர் தன்னை கைது செய்யக்கூடும் என்பதால் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ராமச்சந்திரன் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி பழனிவேல் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசியல் உள்நோக்கத்துடன் இந்த வழக்கு போடப்பட்டுள்ளது என்பதால் தனக்கு முன்ஜாமீன் தர வேண்டும் என்று சாத்தூர் ராமச்சந்திரன் கோரினார். இதற்கு அரசு வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

2 தரப்பு வாதத்தை கேட்ட நீதிபதி, சாத்தூர் ராமசந்திரனுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும் ரூ.10,000 சொந்த ஜாமீன், 2 தனி நபர் ஜாமீன் அளிக்க வேண்டும்.

போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+