ஸ்டாலின் மீதான சொத்து அபகரிப்பு வழக்கு-ஆந்திர தொழிலதிபரை விசாரிக்க போலீஸ் விரைந்தது
சென்னை ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த சேஷாத்திரிகுமார், தனது வீட்டை அபகரித்துக் கொண்டதாக கொடுத்த புகாரின் பேரில் மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின், வேணுகோபால ரெட்டி, ராஜா சங்கர், சுப்பாரெட்டி, சீனிவாசன் ஆகியோர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் தற்போது போலீஸார் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர். சம்பந்தப்பட்ட வீடு வேணுகோபால ரெட்டியின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சார்பதிவாளரிடம் விசாரணை நடந்து வருகிறது. மேலும் ரெட்டியை விசாரிக்க ஹைதராபாத்துக்கு போலீஸ் படை ஒன்று விரைந்துள்ளது.
பெரும் பெரும் பணக்காரர்கள் வசிக்கும் ஹைதராபாத்தின் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் ரெட்டி வீடு உள்ளது. அவரிடம் விசாரணை நடத்தினால்தான் உண்மை தெரிய வரும் என்பதால் ரெட்டியிடம் நடக்கும் விசாரணை முக்கியத்துவம் பெற்றுள்ளது.