அன்னிய முதலீடு-எப்படிங்க ஒருமித்த கருத்து ஏற்படும்?- வணிகர் சங்க பேரவை

Subscribe to Oneindia Tamil

Super Market
சென்னை: சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு விஷயத்தில் கருத்தொற்றுமை என்கிற பெயரில் நாட்டு மக்களை ஏமாற்ற முடியாது என்று பிரதமர் மன்மோகன் சிங் வகையினருக்கு உணர்த்த வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை நிறுத்தி வைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். கருத்தொற்றுமை ஏற்படும் வரை அன்னிய மூலதனம் அனுமதிக்கப்படுவது நிறுத்தி வைக்கப்படுமாம். கருத்தொற்றுமை எப்படி ஏற்படும் அல்லது எப்படி ஏற்படுத்தப்படும், சிந்திக்க வேண்டும்.

கருத்தொற்றுமை ஏற்படும் வரை என்பது, எப்படியாவது அன்னியர்களை அனுமதித்து விடுவது என்பதில் மத்திய அரசு உறுதியாக இருப்பதையே காட்டுகிறது. நாடாளுமன்ற ஓட்டெடுப்பில் பெரும்பான்மை கிடைக்கும் நிலை ஏற்படுத்தப்பட்டால் மக்களையோ, மாநில அரசுகளையோ மதிக்காமல் முடிவெடுத்துவிட மத்திய அரசு தயங்காது என்பது தெளிவு.

இந்த விஷயத்தில் தமிழக முதல்வர் மற்ற மாநில முதல்வர்களுடன் கலந்து பேசி அணி சேர்ப்பதுடன் மத்திய அரசைக் கடுமையாக எச்சரிக்க வேண்டும். நாட்டு சுதந்திரம் பறிபோகாதவாறு தக்க நேரத்தில் தடுத்த பெருமை தமிழக முதல்வருக்கு வந்து சேர வேண்டும் என்ற எமது விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மொத்தத்தில் அன்னியர்கள் விவசாயிகளிடமும் சிறு தயாரிப்பாளர்களிடமும் அடிமாட்டு விலைக்கு பொருட்களை வாங்கி, நுகர்வோராகிய பொது மக்களுக்கு அநியாய விலைக்கு விற்பனை செய்வர். நாட்டு மக்கள் அனைவரும் அணி சேர வேண்டும்.

அன்னியரை எதிர்த்து நிற்க வேண்டும். மத்திய அரசை பணிய வைக்க வேண்டும். கருத்தொற்றுமை என்கிற பெயரில் நாட்டு மக்களை ஏமாற்ற முடியாது என்று மன்மோகன் சிங் வகையினருக்கு உணர்த்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+