முல்லைப் பெரியாறு விவகாரம்: அரசியல் சட்டத்தை மதிக்காத கேரள அரசை கலைத்தாலும் தவறில்லை- ராமதாஸ்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
முல்லைப் பெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்டி தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை தடுத்துவிடவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் கேரள அரசு, அதற்காக மத்திய அரசை மிரட்டி பணியவைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது.
முல்லைப் பெரியாறு அணை வலிமையாக இருப்பதாகவும், அதனால் கேரளத்திற்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும் அம்மாநில அரசின் தலைமை வழக்கறிஞரே கேரள உயர் நீதிமன்றத்தில் கூறியிருக்கிறார். அதன் பிறகும் இரு மாநில மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் கேரளம் ஈடுபட்டிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
எப்படியாவது புதிய அணையை கட்டிவிட வேண்டும் என்பதற்காக சட்டத்திற்கு எதிரான வழிமுறைகளை கேரள அரசு கையாளுகிறது. தமிழக அரசின் பராமரிப்பிலிருக்கும் முல்லைப் பெரியாறு அணைக்குள் புகுந்து கேரள இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் தாக்குதல் நடத்தியிருப்பதும், தமிழகத்தைச் சேர்ந்த வாகனங்களை கேரளத்திற்குள் நுழையவிடாமல் தாக்கி திருப்பி அனுப்புவதும் கடுமையாக கண்டிக்கத்தக்கவை.
கேரள அரசின் இச்செயல்கள் தேச ஒற்றுமைக்கும், கூட்டாட்சி தத்துவத்திற்கும் எதிராக அமைந்துள்ளன. அரசியல் சட்டத்தை மதிக்காமல் செயல்படும் கேரள அரசை கலைத்தால்கூட அது தவறான நடவடிக்கையாக இருக்காது.
மாநிலங்களுக்கிடையிலான உறவுகளை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டு வரும் கேரள அரசை மத்திய அரசு கடுமையாக எச்சரிக்க வேண்டும் - முல்லைப் பெரியாறு அணையின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கான கேரள அரசின் முயற்சிகளை தடுத்துநிறுத்த வேண்டும் - உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி முல்லைப் பெரியாற்று அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும்.
அணையை பாதுகாக்கும் பணியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரை நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாமக சார்பில் 12ம் தேதி காலை 10 மணிக்கு தேனி மாவட்டம் கம்பத்தில் தொடர் முழக்க போராட்டம் நடத்தப்படும். இப்போராட்டத்திற்கு பாமக தலைவர் ஜி.கே.மணி தலைமையேற்பார் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications