கேரளாவில் தமிழர்கள் மீதான தாக்குதல்- லோக்சபாவில் பேச அனுமதி மறுப்பு- திருமா உண்ணாவிரதம்
டெல்லி: கேரளாவில் தமிழக ஐயப்ப பக்தர்கள் மீது நடந்த தாக்குதல் குறித்துப் பேச அனுமதி மறுக்கப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்து லோக்சபாவிலிருந்து வெளிநடப்புச் செய்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நாடாளுமன்ற வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார்.
லோக்சபாவில் இன்று தமிழக ஐயப்ப பக்தர்கள் கேரளாவில் தாக்கப்பட்டது குறித்துப் பேச அனுமதி தருமாறு திருமாவளவன் கோரிக்கை விடுத்தார். ஆனால் அவருக்கு அனுமதி மறுக்கப்ட்டது. இதையடுத்து அவர் வெளிநடப்புச் செய்து வெளியேறினார். பின்னர் நாடாளுமன்ற வளாகத்தில் அவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார்.
அப்போது அவர் கூறுகையில்,பிரதமர் மன்மோகன் சிங் உடனடியாக முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தலையிட்டு அமைதி திரும்பச் செய்ய் வேண்டும். தமிழக ஐயப்ப பக்தர்கள், பெண் தொழிலாளர்கள் கேரளாவில் தாக்கப்பட்டு, மானபங்கம் செய்யபப்பட்டுள்ளது கண்டனத்துக்குரியது என்றார்.












Click it and Unblock the Notifications