கரூர்- சேலம் புதிய அகல ரயில் பாதையில் சோதனை ஓட்டம் துவக்கம்
கரூர்: கரூர்- சேலம் புதிய அகல ரயில் பாதையில் மோகனூர் வரையான சோதனை ஓட்டம் துவங்கியது.
பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கரூர்- சேலம் இடையே 85 கி.மீ தூரம் புதிய அகல ரயில்பாதைப் பணிகள் சில ஆண்டுகளுக்கு முன்பு துவங்கியது. சேலம், ராசிபுரம், நாமக்கல், மோகனூர், வாங்கல் வழியாக கரூருக்கு அகல ரயில் பாதை அமைக்கும் பணிகளில் தாமதம் ஏற்பட்டதால் திட்ட மதிப்பீடும் மேலும் அதிகரித்தது.
தற்போது ரூ.650 கோடி மதிப்பில் கரூர் - சேலம் புதிய ரயில்வே இருப்பு பாதை பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக சேலம் - நாமக்கல் வரை ரயில் பாதை அமைக்கும் பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முடிவடைந்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
தற்போது கரூர் - மோகனூர் இடையே 15 கிலோ மீட்டர் தூரம் இருப்பு பாதை அமைக்கும் பணி முடிவடைந்து, கரூர்- மோகனூர் இடையே சோதனை ஓட்டம் நடைபெற்றது. ஏற்கனவே சேலம்- நாமக்கல்- மோகனூர் இடையே ரயில்வே பாதை தரம் குறித்த சோதனை ஓட்டம் முடிந்துவிட்டது. தற்போது கரூர் - மோகனூர் இடையே சோதனை ஓட்டம் துவங்கி உள்ளது. இதனால் விரைவில் புதிய ரயில் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய வழி்த்தடம் மூலம் தென் மாவட்டங்களை சேர்ந்த மக்கள் அதிக அளவில் பயன் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications