முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: மத்திய அரசை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம்: தா. வெள்ளையன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையில் மத்திய அரசின் பொறுப்பற்ற தன்மையை கண்டித்து இன்று (9ம் தேதி) சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய அரசின் பொறுப்பற்ற தன்மையை வன்மையாகக் கண்டிக்கிறோம். இரு மாநில மக்களும், இந்திய ஒருமைப்பாட்டிற்கு ஏற்ப சகோதரர்களாக வாழ்ந்து வரும் நிலையில் இந்தப் பிரச்சனை சகோதரத்துவத்துக்கு ஊறுவிளைவிப்பதாக உள்ளது.

கேரள மாநில தலைவர்கள் இந்த பிரச்சனையை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்துவதை கைவிட வேண்டும். நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டிருக்கும் விபரீத விளைவுகளை தடுத்து நிறுத்த மத்திய அரசு தவறிவிட்டது. தற்போதாவது இந்த விவகாரத்தில் மத்திய அரசு விரைந்து செயல்பட வேண்டும்.

கேரளாவில் வசிக்கும் தமிழர்களும், சபரிமலைக்கு செல்லும் தமிழர்களும், தமிழகத்தில் இருந்து செல்கின்ற வாகனங்களும் தாக்கப்படுவது ஒவ்வொரு இந்தியனுக்கும் தலைக்குனிவு ஆகும். இது போன்ற முக்கிய பிரச்சனைகளில் பொறுப்பு இல்லாமல் செயல்படும் மத்திய அரசை கண்டித்து 9ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகைக்கு முன்பு பேரவையின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அந்த அறிக்கையி்ல் தெரவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+