கேரளாவைக் கண்டித்து சட்டசபையில் தீர்மானம் போட புதுவை அதிமுக கோரிக்கை
புதுச்சேரி: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசைக் கண்டித்து தமிழக சட்டசபையில் ஆளுங்கட்சியான அதிமுக, கண்டனத் தீர்மானம் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்காத நிலையில், அதுபோன்ற தீர்மானத்தை போட வேண்டும் என்று புதுவை அரசை, புதுச்சேரி அதிமுக வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி அதிமுக செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ. கூறுகையில், முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு தமிழர்களுக்கு விரோதமாக செயல்பட்டு வருவது கண்டனத்துக்குரியது. இதைக் கண்டிக்கும் வகையில் புதுச்சேரி சட்டசபையில் கேரளாவைக் கண்டித்து தீர்மானம் கொண்டு வர என்.ஆர். காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் இந்த விவகாரத்தில், கேரளை அரசை மத்திய அரசு கண்டிக்க வேண்டும் என்றும் புதுச்சேரி அரசு வலியுறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இருப்பினும் இதேபோன்ற தீர்மானத்தை தமிழக சட்டசபையில் நிறைவேற்ற வேண்டும் என்று அவர் கூறவில்லை.












Click it and Unblock the Notifications