என் வாழ்க்கையில் ரொம்பவும் மோசமான நாள்.. பாக்யராஜ் பற்றி பேச முடியாமல் கதறி அழுத பார்த்திபன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவின் திரைக்கதை மன்னன் கே. பாக்யராஜின் திடீர் மறைவு திரையுலகையே உலுக்கியுள்ளது. அவருடன் பணியாற்றிய நடிகர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், ரசிகர்கள் என அனைவரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், அவரது உடல் இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது.

அங்கு திரையுலக பிரபலங்கள் தொடர்ந்து வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வரிசையில், பாக்யராஜின் சீடராகவும், பின்னர் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் முதலில் வந்து அஞ்சலி செலுத்தியவர்களில் ஒருவராக இருந்தார்.

உடைந்து போன பார்த்திபன்

பாக்யராஜின் உடலுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய பார்த்திபன், அங்கிருந்து வெளியே வந்தபோது செய்தியாளர்கள் அவரிடம் கருத்து கேட்க முயன்றனர்.

ஆனால் பேசத் தொடங்கிய சில நொடிகளிலேயே அவரது குரல் தழுதழுத்தது. "என்னுடைய வாழ்க்கையில் ரொம்பவே வேதனையான நாள் இன்று தான். பாக்யராஜ் சார் இல்லன்னு என்னால் இன்னும் நம்பவே முடியல..." என்று கூறிய அவர், அதற்கு மேல் பேச முடியாமல் சில நிமிடங்கள் அமைதியாக நின்றார்.

கண்களில் கண்ணீர் வழிந்தபடி, தன்னையே சமாளிக்க முடியாமல் தவித்த அந்த காட்சி அங்கிருந்த அனைவரையும் கலங்க வைத்தது.

K Bhagyaraj R Parthiban

உருக்கமான வேண்டுகோள்

சில நிமிடங்கள் கழித்து மீண்டும் பேசிய பார்த்திபன், "இது ரொம்ப திடீர்னு நடந்த சம்பவம். நிறைய பேர் வந்து அவருக்கு அஞ்சலி செலுத்தப் போறாங்க. அதனால அனைவரும் வந்து செல்ல வசதியாக நீங்கள் செய்தியாளர்களும் உதவி செய்யுங்கள்..." என்று மட்டும் வேண்டுகோள் வைத்தார். அதன்பிறகு வேறு எதையும் பேச முடியாமல் அங்கிருந்து நகர்ந்தார்.

போனில் பேசும்போதும் அழுத பார்த்திபன்

வீட்டை விட்டு வெளியே வந்த பிறகும் பார்த்திபன் மனதை தேற்றிக்கொள்ள முடியவில்லை. அவரது நெருங்கிய நண்பர்கள் மற்றும் திரையுலக பிரபலங்களுக்கு ஒவ்வொருவராக தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அழுதபடியே பாக்யராஜின் மறைவு குறித்து பேசிக் கொண்டிருந்தார் என அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்த வீடியோ காட்சிகளும் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, ரசிகர்களின் மனதை நெகிழச் செய்து வருகின்றன.

உதவி இயக்குநராக தொடங்கிய பயணம்

இன்று தனக்கென தனி பாணியில் இயக்குநராகவும் நடிகராகவும் பெயர் பெற்றிருக்கும் பார்த்திபன், தனது திரைப்பயணத்தின் ஆரம்பத்தில் பாக்யராஜிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.

திரைக்கதை அமைப்பது எப்படி, சாதாரண காட்சியையே சுவாரஸ்யமாக மாற்றுவது எப்படி, ஒரு கதையை ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பது எப்படி என்பதையெல்லாம் தனது குருவிடம் இருந்துதான் கற்றுக்கொண்டதாக பல மேடைகளில் பார்த்திபன் பெருமையாக கூறியுள்ளார். அதனால்தான் பாக்யராஜை அவர் ஒரு இயக்குநராக மட்டுமல்ல, தனது வாழ்க்கையை மாற்றிய குருவாக எப்போதும் மதித்து வந்தார்.

குருவை இழந்த சீடன்

பார்த்திபன் கண்ணீரை அடக்க முடியாமல் நின்ற காட்சியை பார்த்த ரசிகர்கள், "இது ஒரு நடிகரின் அழுகை இல்லை... தனது குருவை இழந்த சீடனின் வலி", "பாக்யராஜ் இல்லாததை பார்த்திபனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை", "இந்த காட்சியை பார்த்த பிறகுதான் பாக்யராஜ் எத்தனை பேரின் வாழ்க்கையை உருவாக்கியிருக்கிறார் என்பது புரிகிறது" என்று உருக்கமாக பதிவிட்டு வருகின்றனர்.

பாக்யராஜின் மறைவு தமிழ் சினிமாவுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாக மட்டுமல்ல, அவரிடம் கற்றுக் கொண்டு வளர்ந்த பல சீடர்களின் வாழ்க்கையில் நிரப்ப முடியாத வெற்றிடமாகவும் மாறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+