உல்லாசத்திற்கு வர மறுத்ததால் கள்ளக்காதலியை உயிரோடு எரித்துக் கொன்ற கொடூரன்!
திருவண்ணாமலை: உல்லாசமாக இருக்க கள்ளக்காதலி வர மறுத்ததால் அவரை அப்பெண்ணின் கள்ளக்காதலன் உயிரோடு தீவைத்து எரித்துக் கொன்ற கொடூர சம்பவம் திருவண்ணாமலை அருகே நடந்துள்ளது.
திருவண்ணாமலை அருகே உள்ளது நாராயணமங்கலம் கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்தவர் அஞ்சலை. 45 வயதான இவரது கணவர் 15 ஆண்டுக்கு முன்பே இறந்து விட்டார். அஞ்சலைக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
அஞ்சலைக்கும், காசி என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் தனது மகளின் 3 பவுன் நகையை காசி எடுத்து விற்று விட்டதை அறிந்தார் அஞ்சலை. இதனால் காசி மீது கடும் கோபம் கொண்டார்.
இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த நிலையில் அஞ்சலையின் மகன் விஜயக்குமார் சபரிமலைக்கு மாலை போட்டு போயுள்ளார். இந்த நேரம் பார்த்து வீட்டுக்கு வந்த காசி, அஞ்சலையை உல்லாசமாக இருக்கக் கூப்பிட்டுள்ளார். ஆனால் மகன் மலைக்குப் போயிருக்கும் நேரத்தில் இது கூடாது என்று அஞ்சலை மறுத்துள்ளார்.
இதனால் கோபமடைந்தார் காசி. இதையடுத்து வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து அஞ்சலை மீது ஊற்றி தீவைத்து விட்டார். தீக்காயம் பட்டு துடித்த அஞ்சலையை அக்கம் பக்கத்தில் இருந்தோர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தன்னை காசிதான் தீவைத்துக் கொளுத்தியதாக வாக்குமூலம் அளித்தார் அஞ்சலை. இதையடுத்து கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்த போலீஸார் காசியைக் கைது செய்தனர்.
இந்த நிலையில் தற்போது அஞ்சலை இறந்து விட்டார். இதையடுத்து அவரது வாக்குமூலத்தை மரண வாக்குமூலமாக மாற்றி காசி மீதான வழக்கையும் கொலை வழக்காக போலீஸார் மாற்றியுள்ளனர்.












Click it and Unblock the Notifications