For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

துவாரகா வாராந்திர ரயில் கரூரில் நிற்கும் - ரயில்வே மேலாளர் தகவல்

Google Oneindia Tamil News

கரூர்: உத்திரபிரதேசம் மாநிலம் துவாரகாவில் இருந்து மதுரைக்கு செல்லும் ரயில் கரூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று ரயில்வே மேலாளர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கரூர் ரயில் நிலைய மேலாளர் ஜீவா கூறியதாவது,

உத்திரபிரதேசம் மாநிலம் துவாரகாவில் இருந்து வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அதிகாலை 12.20 மணிக்கு விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் மதுரைக்கு புறப்படுகிறது. இந்த ரயில் ராஜ்கோட், அகமாதபாத், வதேரா, சூரத், கல்யாண், புனே, குல்பர்கா, ராய்ச்சூர், மந்த்ராலயம், குண்டக்கல், எலகங்கா, கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு வழியாக வாரந்தோறும் ஞாயிற்று கிழமை அதிகாலை 12.57 மணிக்கு கரூர் ரயில் நிலையத்திற்கு வந்து 1 மணிக்கு மதுரைக்கு புறப்பட்டு செல்கிறது.

அதேபோல் வாரந்தோறும் திங்கள் கிழமை அதிகாலை 2 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு கரூருக்கு அதிகாலை 4.40 மணிக்கு வந்து 4.43 மணிக்கு துவாரகா புறப்பட்டு செல்லும், என்றார்.

English summary
Karur railway station manager Jeeva said that Dwaraga weekly train will stop in Karur railway station in both the routes, hereafter.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X