சிரஞ்சீவி பணத்துக்காக கட்சியையும், எம்.எல்.ஏ.க்களையும் காங்கிரஸுக்கு விற்றுவிட்டார்: ரோஜா தாக்கு
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்: நடிகர் சிரஞ்சீவி பணத்திற்கு ஆசைப்பட்டு மக்களின் நம்பிக்கையை குழிதோண்டி புதைத்துவிட்டு தனது கட்சியை காங்கிரஸுக்கு விற்றுவிட்டார் என்று நடிகையும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரசின் முன்னணி தலைவருமான ரோஜா குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
நடிகர் சிரஞ்சீவி அரசியலுக்கு வந்தவுடன் ஆந்திர மக்கள் அவர் மீது அளவுகடந்த நம்பிக்கை வைத்தார்கள். அவர் ஏழை, நடுத்தர மக்களுக்காக பாடுபடுவார் என்றெல்லாம் கனவு கண்டார்கள். ஆனால் அவர் தன்னை நம்பிய மக்களை ஏமாற்றிவி்ட்டார். பணத்திறக்கு ஆசைப்பட்டு பிரஜா ராஜ்ஜியம் கட்சியையும், அதன் எம்.எல்.ஏ.க்களையும் அவர் காங்கிரஸ் கட்சிக்கு விற்றுவிட்டார். அவர் ஒரு அரசியல் வியாபாரி. அடுத்த தேர்தலில் அவருக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்றார்.
நடிகர் சிரஞ்சீவி கடந்த 2008ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26ம் தேதி பிரஜா ராஜ்ஜியம் என்ற கட்சியைத் துவங்கினார். கட்சி துவங்கிய மூன்றாவது ஆண்டில் அதை காங்கிரஸுடன் இணைத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.













Click it and Unblock the Notifications