ராஜபாளையத்தில் 10ம் வகுப்பு மாணவி காரில் கடத்தல்
ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே 10ம் வகுப்பு மாணவியை காரில் கடத்தி சென்ற வாலிபர் உள்பட 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணாநகரை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகள் ராமலெட்சுமி. இவர் ராஜபாளையத்தில் உள்ள தனியார் டுடேரியல் ஒன்றில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். வழக்கம்போல் டூட்டோரியல் சென்ற அவர் வீடு திரும்பவில்லை என்று தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் மகளை அக்கம் பக்கத்தில் தேடினர். இதனையடுத்து ராமலெட்சுமியின் தாய் சந்தியா ராஜபாளையம் போலீசில் புகார் செய்தார்.
காரில் கடத்தல்
புகாரில் எனது மகளை ஆசை வார்த்தை கூறி பரமராஜ், அவரது தாய் முத்துலெட்சுமி, அண்ணன் சீதராஜ், உறவினர்கள் முருகன், காளை, காளிகுரு ஆகியோர் காரில் கடத்தி சென்று விட்டனர் என கூறி இருந்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த இன்ஸ்பெக்டர் இளங்கோவன், சப்-இன்ஸ்பெக்டர் வீரபாண்டி ஆகியோர் மாணவியை கடத்தி சென்ற பால்ராஜ் உள்ளிட்ட 6 பேரையும் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications