கல்பாக்கம் அணுமின் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: இன்று அல்லது நாளை வெடிக்கும்

சென்னை கல்பாக்கம் அணுமின் நிலையத்திற்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. அந்த மர்ம் இமெயிலில் அணுமின் நிலையத்தில் இன்று அல்லது நாளை குண்டு வெடித்துச் சிதறும் என்று மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார், வெடிகுண்டு நிபுணர்களுடன் அங்கு விரைந்து வந்தனர். வெடிகுண்டு எதுவும் இருக்கிறதா என்று அங்கு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
ஏற்கனவே கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி மாதக் கணக்கில் போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில் கல்பாக்கம் அணுமின் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2002ம் ஆண்டு டிசம்பர் மாதம் கல்பாக்கம் அணுமின் நிலையத்தை வெடிகுண்டு வைத்து தகர்க்க சதித் திட்டம்தீட்டப்பட்டுள்ளதாக ஒரு மர்மக் கடிதம் வந்தது. ஆனால் அது பொய்யான கடிதம் என்று சோதனையில் தெரியவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications