முல்லைப் பெரியாறு: கேரள அரசைக் கண்டித்து திமுக மனிதச் சங்கிலி போராட்டம்
சென்னை: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசை கண்டித்து திமுக சார்பில் இன்று மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தப்பட்டது.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசை கண்டித்து திமுக சார்பில் இன்று மாலை மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது. மதுரையில் திமுக பொதுச் செயலளார் க.அன்பழகன் தலைமையிலும், தேனியில் பொருளாளர் ஸ்டாலின் தலைமையிலும், திண்டுக்கல்லில் முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தலைமையிலும், சிவகங்கையில் சற்குண பாண்டியன் தலைமையிலும் போராட்டம் நடந்தது.
க. அன்பழகன் தலைமையில் உசிலம்பட்டி முதல் மதுரை வரை 41 கி.மீ. தூரத்துக்கு மனிதச் சங்கிலி போராட்டம் நடந்தது. இதில் திரளான திமுகவினர் கலந்து கொண்டனர்.
உசிலம்பட்டி தேவர் சிலை தொடங்கி பி.ஆர்.சி டிப்போ வரை உசிலம்பட்டி நகர திமுகவினரும், பி.ஆர்.சி. டிப்போ தொடங்கி தி.விலக்கு வரை சேடபட்டி ஒன்றிய கட்சியினரும், தி.விலக்கு முதல் வாலாந்தூர் கண்மாய் வரை உசிலம்பட்டி ஒன்றியத்தினரும், வாலாந்தூர் கண்மாய் முதல் கருமாத்தூர் வரை செல்லம்பட்டி ஒன்றியத்தினரும் மனிதச் சங்கிலியாக நின்றனர்.
கருமாத்தூர் முதல் புளியங்குளம் வரை கல்லுப்பட்டி, திருமங்கலம் ஒன்றியம், நகரத்தினரும், புளியங்குளம் முதல் காமராஜர் பல்கலைக்கழகம் வரை வாடிப்பட்டி ஒன்றியம், பேரூர், அலங்காநல்லூர், பாலமேடு, சோழவந்தான் ஒன்றியத்தினரும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் தொடங்கி ரிங்ரோடு வரை திருப்பரங்குன்றம் ஒன்றியம், நகரம், ஹார்விப்பட்டி, திருநகர், அவனியாபுரம் நகர் பகுதியினரும் மனிதச் சங்கிலியாக நின்றனர்.
ரிங்ரோடு முதல் அச்சம்பத்து வரை மதுரை மேற்கு ஒன்றியம், ஆனையூர் நகரம், விளாங்குடி, பரவை பேரூர், அச்சம்பத்து முதல் மதுரை மாநகராட்சி எல்லை வரை மேலூர் ஒன்றியம், நகரம், கொட்டாம்பட்டி ஒன்றியம், அ.வல்லாளபட்டி பேரூர் பகுதியினரும் மனிதச் சங்கிலியாக நின்றனர்.












Click it and Unblock the Notifications