கரூரில் பாய்லர் வெடித்து விபத்து- பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு
Subscribe to Oneindia Tamil
கரூர்: கரூரில் சாயப்பட்டறையில் இருந்த பாயிலர் வெடித்ததில் ஏற்பட்ட விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
கரூரில் டிசம்பர் 6ம் தேதி டி.செல்லாண்டிபாளையில் செயல்பட்டு வந்த கவி கலர்ஸ் சாயப்பட்டறையின் பாய்லர் வெடித்து 4 தொழிலாளர்கள் உடல் சிதறி பலியாகினர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 19 பேர் கரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள கல்பனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதில் வேலுச்சாமிபுரத்தை சேர்ந்த சரவணன்(33) என்பவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் சிகிச்சை பெற்று வந்த கார்த்திகாதேவி(25) என்பவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து இந்த விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications