திருவண்ணாமலையில் டிசம்பர் 18ம் தேதி வேலை வாய்ப்பு சிறப்பு முகாம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் டிசம்பர் 18ம் தேதி வேலை வாய்ப்பு சிறப்பு முகாம் நடைபெறும் என்று மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.
இது குறித்து மாவட்ட கலெக்டர் அன்சுல் மிஸ்ரா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது,
திருவண்ணாமலையில் வரும் 18ம் தேதி வேலை வாய்ப்பு சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் இன்ஜினியரிங், பாலிடெக்னிக், ஐடிஐ, செவிலியர் பயிற்சி படிப்பு முடித்தவர்கள், இதர தொழிற்கல்வி பிரிவினர், பயிற்சி இல்லாதோர் உள்ளிட்டோர் தங்களது தகுதியை பதிவு செய்து கொள்ளலாம்.
இந்த பயிற்சி முகாமில் வேலை வாய்ப்பு தகவல்களும், வழிகாட்டுதல்களும், ஆலோசனைகளும் வழங்கப்படும். தமிழகத்தின் முன்னணி தொழில் நிறுவனங்களின் தொழில் முறை வழிகாட்டுநர்கள், ஆலோசகர்கள் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்க உள்ளனர்.
எனவே இந்த சிறப்பு முகாமில் தகுதி உள்ள அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறலாம் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications