அத்வானி ரத யாத்திரையில் வெடி குண்டு - கைதான 2 பேரின் கோரிக்கை நிராகரிப்பு

பாஜக மூத்த தலைவர் அத்வானி ரத யாத்திரை செல்லும் வழியில் ஆலம்பட்டி அருகே பைப் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி மதுரையை சேர்ந்த அப்துல்லா, இஸ்மத் உள்ளிட்டோரை கைது செய்தனர். கைதான 2 பேரும் நீதிமன்ற உத்தரவின் பேரில் மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதன் இடையே அப்துல்லா வேலூர் சிறைக்கும், இஸ்மத் சேலம் சிறைக்கும் மாற்றப்பட்டனர். ஆனால் தங்களை மீண்டும் மதுரை சிறைக்கு மாற்றக் கோரி வழக்கறிஞர் சீமான் என்பவர் மூலம் இருவரும் மனு தாக்கல் செய்தனர். இதனால் நீதிமன்ற காவல் முடிந்து அப்துல்லா, இஸ்மத் உள்ளிட்ட 2 பேரும் திருமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது சிறை மாற்றம் செய்ய சிறைத்துறைக்கு அதிகாரம் உள்ளது என்று கூறி அவர்களது மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இருவருக்கும் வரும் 30ம் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்து உத்தரவிட்டார். இதனையடுத்து அப்துல்லா வேலூர் சிறைக்கும், இஸ்மத் சேலம் சிறைக்கும் பலத்த பாதுகாப்புடன் போலீசார் கொண்டு செல்லப்பட்டனர்.












Click it and Unblock the Notifications