Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தர்மபுரி காகித தொழிற்சாலையி்ல் விஷவாயு தாக்கி 2 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

தர்மபுரி: தர்மபுரியில் உள்ள காகித தொழிற்சாலையில் பேப்பர் கூழ் தயாரிப்பு தொட்டியை சுத்தம் செய்ய இறங்கிய 2 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி பரிதாபமாக பலியாகினர்.

தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லூரை அடுத்த கே.ஈச்சம்பாடியில் தனியாருக்கு சொந்தமான தர்மபுரி பேப்பர் மில்ஸ் என்ற தொழிற்சாலை உள்ளது. இங்கு காகித கூழ் தயாரிக்கும் தொட்டியை சுத்தம் செய்ய கதிரவன் என்பவர் ஏணி மூலம் உள்ளே இறங்கினார்.

ஆனால் வெகுநேரமாகியும் அவர் வெளியே வரவில்லை. இதனையடுத்து விஸ்வநாதன்(30) என்பவர் கதிரவனை தேடி தொட்டிற்குள் இறங்கினார்.

சிறிதுநேரத்தில் தொட்டிக்குள் இருந்து லேசான அலறல் சத்தம் கேட்டது. இதனையடுத்து அருகில் இருந்த மற்ற 3 தொழிலாளர்களும் தொட்டியில் இறங்கினர். இதில் தொட்டியில் இருந்த விஷவாயு தாக்கி 5 பேரும் அடுத்தடுத்து மயக்கமடைந்தனர்.

இதனை அறிந்த மற்ற தொழிலாளர்கள், தொட்டிக்குள் மயக்கமடைந்து கிடந்த 5 பேரையும் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இங்கு கதிரவன், விஸ்வநாதன் உள்ளிட்ட 2 பேரும் ஏற்கனவே இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். மேலும் பிரசாந்த், குமரேசன், பழனி ஆகிய 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

காகித தொழிற்சாலைக்கு 5 நாட்களாக விடுமுறை விடப்பட்டு இருந்தால், காகித கூழ் தொட்டியில் விஷ வாயு உற்பத்தியாகி, 5 பேரும் மயக்கமடைந்தது தெரிய வந்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த ஆலைக்கு மாவட்ட உதவி கலெக்டர் மூலம் சீல் வைக்கப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+