அன்னா ஒரு பயங்கரவாதி: பெரியார் தி.க. தாக்கு- கருப்புக் கொடி காட்டி போராட்டம்

சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே இன்று சென்னை வந்திறங்கினார். அப்போது அவருக்கு எதிரிப்பு தெரிவித்து பெரியார் தி.க., 17 இயக்கம், மக்கள் இயக்கம் உள்ளிட்டவை கருப்புக் கொடி காட்டின. எங்கு சென்றாலும் அன்னாவுக்கு பேராதரவு கிடைத்து வரும் நிலையில் சென்னையில் கருப்புக் கொடி காட்டப்பட்டது அவரது ஆதரவாளர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.
ஜனநாயகத்திற்கு எதிராக, சர்வாதிகாரி போல செயல்படும் அன்னாவும் ஒரு பயங்கரவாதி தான். இந்தி வெறியரான அவர் இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவர். அவர் இந்தியில் மட்டுமே பேசுகிறார் என்று பெரியார் தி.க.வினர் குற்றம் சாட்டினர்.
இருப்பினும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அன்னா ஹசாரே விமான நிலையத்திலிருந்து அழைத்துச் செல்லப்பட்டார். அன்னாவுடன் கிரண் பேடியும் உடன் வந்திருந்தார்.
பின்னர் மாலையில் சென்னை பச்சையப்பன் கல்லூரி மைதானத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் அன்னா ஹசாரே கலந்து கொண்டு பேசினார். அவருடன் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, கிரண் பேடி ஆகியோரும் பேசினர்.
முன்னதாக நேற்று அன்னா ஹசாரே, பெங்களூர் வந்திருந்தார். அங்குள்ள ப்ரீடம் பார்க்கில் நடந்த கூட்டத்தி்ல் அவர் பேசினார். அவரைப் பார்க்க சுமார் 15,000 பேர் குவிந்திருந்தனர். அங்கு அவர் ஊழலுக்கு எதிராகப் பேசினார்.
ஊழலுக்கு எதிராக ஊர், ஊராகப் பிரச்சாரம் செய்து வரும் அன்னா செல்லும் இடமெல்லாம் அவருக்கு மக்கள் அமோக ஆதரவு தந்து வந்துள்ள நிலையில் தமிழகத்தில் அவருக்கு எதிராக கருப்புக் கொடி காட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications