நாராயணசாமி மீது சட்டப்பூர்வமாக வழக்கு தொடர்வேன்- உதயகுமார் பேட்டி
நெல்லை: மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறிய புகாருக்கு சட்டப்பூர்வமாக வழக்கு தொடர்வேன் என்று கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து போராடும் போராட்டக் குழுவின் தலைவர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டக்காரர்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது என்பது பற்றி மத்திய உள்துறை அமைச்சகம் விசாரணை நடத்தியது. இதில் பல்வேறு ஆதாரங்கள் சிக்கி உள்ளன. இது தொடர்பாக விளக்கம் கேட்டு 6 தொண்டு நிறுவனங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்திருந்தார்.
இதற்காகத் தான் அவர் மீது வழக்குத் தொடரப் போவதாக போராட்டக்குழு தலைவர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து உதயகுமாரிடம் நிருபர்கள் கேட்டவுடன் அவர் பதட்டமடைந்தார். வழக்கமாக போராட்டங்கள் குறித்து நிறுத்தி, நிதானமாகப் பேசும் அவர், வெளிநாட்டு தொண்டு நிறுவனங்கள், நிதி' போன்ற வாசகங்களால் அதிர்ச்சியடைந்தார்.
அவர் கூறுகையில், "எந்த நிறுவனத்தில் இருந்தும் ஐந்து பைசா கூட வரவில்லை. ஒருவேளை பணம் வந்திருந்தால், அதை காங்கிரஸ்காரர்கள் வழிமறித்து பிடுங்கியிருப்பார்கள் என தோன்றுகிறது. இத்தகைய புகார்கள் கூறும் நாராயணசாமி மீது சட்டப்பூர்வமாக வழக்கு தொடர்வேன்'' என்றார்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications