பெங்களூர் அருகே கலவரம் -ஒருவர் சுட்டுக் கொலை-தமிழக பஸ்கள் ஓசூருடன் நிறுத்தம்!

Subscribe to Oneindia Tamil

ஓசூர்: பெங்களூர் அருகே ஆனேக்கல் என்ற இடத்தில் ராமச்சந்திர ரெட்டி என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து ஓசூர் வழியாக பெங்களூர் செல்லும் வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூர் அருகே ஆனேக்கல் என்ற இடத்தில் நடந்த மோதலில் ராமச்சந்திர ரெட்டி என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனால் அங்கு கலவரம் வெடித்துள்ளது.

சந்தாபுரம் என்ற இடத்தில் 3 பேருந்துகள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன. இதனால் பெரும் பதட்டம் நிலவுகிறது. போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் கலவரத்தைத் தொடர்ந்து அசாதாரண நிலை காணப்படுவதால், தமிழகத்திலிருந்து ஓசூர் வழியாக செல்லும் பேருந்துகள், வாகனங்கள் ஓசூருடன் நிறுத்தப்பட்டுள்ளன. நிலைமையின் தன்மையைப் பொறுத்து வாகனங்கள் அனுமதிக்கப்படும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+