கேரளாவுக்கு எதிராக செங்கோட்டை, களியக்காவிளை பாதையை மூடுவோம்-நாம் தமிழர் இயக்கம் எச்சரிக்கை
நெல்லை: கேரளாவுக்கு தகுந்த பாடம் புகட்ட செங்கோட்டை, களியக்காவிளை எல்லைகளை மூடுவோம் என்று நாம் தமிழர் இயக்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் வழக்கம்போல் மத்திய அரசு மவுனம் காப்பது கேரள அரசின் நியாயத்துக்கு புறம்பான செயலுக்கு ஆதரவு தெரிவிப்பது போல் உள்ளது என்று தமிழக மக்கள் கருதுகின்றனர். பேச்சுவார்த்தை, ஒப்பந்தம், வழக்கு, தீர்ப்பு என அனைத்து கட்டங்களையும் தாண்டி வந்த பின்பு மீண்டும் பேச்சுவார்த்தை என்ற முதல் கட்டத்துக்குள் நுழைவதை தமிழக விவசாயிகள் விரும்பவில்லை. எனவே தேனி, மதுரை, ராமநாதபுரம் விவசாயிகள் தன்னிச்சையான போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கேரள எஸ்டேட்டுகளில் வேலை பார்க்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் அடித்து விரட்டப்பட்டு உடமை இழந்த நிலையில் உயிர் பிழைத்தால் போதும் என்று தமிழகத்திற்கு தப்பியோடி வருகின்றனர். மேலும் இங்கிருந்து தான் ஐயப்ப பக்தர்கள் கேரளாவுக்கு அதிக அளவில் செல்கின்றனர். பக்தர்கள் என்று கூட பாராமல் மலையாளிகள் அவர்களையும் தாக்கியுள்ளனர். இதனால் செங்கோட்டை, களியக்காவிளை சாலைகளை முற்றுகையிட்டு கேரளாவுக்கு செல்லும் அரிசி, காய்கறி, பால், மணல் மற்றும் அத்திவாசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரிகளை மறிக்க வேண்டும் என்ற உத்வேகம் நெல்லை, குமரி மாவட்டத்தினருக்கு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து நாம் தமிழர் இயக்க தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சிவகுமார் கூறுகையில், கம்பம் மெட்டு உள்ளிட்ட வடபகுதி நுழைவாயில்கள் அடைக்கப்பட்டதால் கேரளாவுக்கு செல்லும் அத்தியாவசியப் பொருட்கள் தடுக்கப்பட்டுள்ளன. ஆனாலும் கேரள அரசும், மலையாளிகளும் இன்னும் அணையின் நீர்மட்டத்தைக் குறைப்பது பற்றியும், புதிய அணை கட்டுவது பற்றியும் வலியுறுத்துகின்றனர். இது சட்டத்துக்கு புறம்பானது.
மேலும் தமிழர்களை தாக்கியும், தமிழ் பெண்களை பாலியல் சித்ரவதை செய்தும் மனித உரிமையை நசுக்குகியுள்ளனர். எனவே செங்கோட்டை, களியக்காவிளை சாலைகளை மூட வேண்டும். இல்லையேல் தமிழர் அமைப்புகளை ஒன்று திரட்டி விரைவில் இரு பாதைகளும் அடைக்கப்படும் என்றார்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications