அதிக விளைச்சல் பெறும் விவசாயிக்கு ரூ.5 லட்சம், பதக்கம்: ஜெயலலிதா அறிவிப்பு

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
வேளாண்மை வளர்ச்சி நவீன தொழில் நுட்பங்களைச் சார்ந்துள்ளதால் வேளாண் உற்பத்தியைப் பெருக்க, பல்வேறு நவீன தொழில் நுட்பங்களை புகுத்த வேண்டியது மிகவும் அவசியம் என்பதால், முதல்வர் ஜெயலலிதா, தமிழ்நாட்டில் புதிய தொழில் நுட்பத்தை புகுத்தி, இரண்டாம் பசுமைப் புரட்சிக்கு வித்திட்டு வருகிறார்கள்.
தற்பொழுது நவீன தொழில் நுட்பத்துடன் அமல்படுத்தப்படும் பல்வேறு சாகுபடி முறைகளில் திருந்திய நெல் சாகுபடி முறையே உணவு உற்பத்தியை அதிகரிக்கச் செய்ய சிறந்த முறையாகும். இம்முறைக்கு அதிக ஊக்கம் அளிக்கும் வகையில் திருந்திய நெல் சாகுபடி தொழில் நுட்பத்தினை கடைப்பிடித்து, மாநிலத்திலேயே அதிக விளைச்சலைப் பெறும் விவசாயிக்கு, ஒவ்வொரு ஆண்டும் சிறப்புப் பரிசுத் தொகையாக 5 லட்சம் ரூபாயும், ரூ.3,500 மதிப்புள்ள பதக்கமும் குடியரசு தினத்தன்று வழங்குவதற்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இப்பரிசு முதல்வர் அவர்களால் வழங்கப்படும்.
இப்போட்டியில் பங்கு பெறும் விவசாயி, குறைந்த பட்சம் 50 சென்ட் நிலத்தில் பயிர் செய்திருக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு, குறைந்தபட்ச விளைச்சல் 2,500 கிலோ இருக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் இந்தப் போட்டி நடத்தப்படும். இப்போட்டி சென்னை, நீலகிரி தவிர்த்து அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படும்.
முதல்வர் ஜெயலலிதா அவர்களின் இந்த நடவடிக்கையினால் விவசாயிகளிடையே வேளாண்மையில் புதிய தொழில் நுட்பங்களை புகுத்துவதில் அதிக ஆர்வமும், போட்டியும் ஏற்படும். இதன் மூலம் குறைந்த நிலத்தில் அதிக அளவு உற்பத்தி பெருக வழிவகை ஏற்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்!












Click it and Unblock the Notifications