மன நலம் பாதித்த தங்கை-தீவைத்துக் கொளுத்தி தானும் தற்கொலை செய்த அண்ணன்!
சிவகங்கை: மனநலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தங்கையை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற அண்ணன் தானும் தற்கொலை செய்து கொண்டார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்த மேலவூரணி வக்கீல் தெருவைச் சேர்ந்தவர் கணேசன். தங்க நகை செய்யும் கொல்லராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி தனலட்சுமி (30). இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகன் இருக்கிறான்.
சமீபத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட தனலட்சுமி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது அண்ணன் ராஜ்குமார் (32) உடன் இருந்து தனலட்சுமியை கவனித்து வந்தார். தனலட்சுமிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையின் மூலம் அவரது மனநலத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இதனை தாங்க முடியாத ராஜ்குமார் நேற்று அதிகாலை 3 மணியளவில் ஒரு பாட்டிலில் பெட்ரோலுடன் மருத்துவமனைக்கு வந்தார். மருத்துவமனையில் அனைவரும் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த நேரத்தில் தனலட்சுமியின் மீதும் தன் மீதும் ராஜ்குமார் பெட்ரோலை ஊற்றிக் கொண்டார். அதன்பிறகு 2 பேர் மீதும் தீ வைத்தார்.
இதில் தனலட்சுமி சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார். பலத்த தீக்காயமடைந்த ராஜ்குமார் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். ராஜ்குமாரின் தாய் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார். அதேபோல தங்கைக்கும் மனநிலை பாதிக்கப்பட்டதால், ராஜ்குமாருக்கு யாரும் பெண் கொடுக்கவில்லை. அதனால் மனமுடைந்த அவர் தனது தங்கையைக் கொன்று தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரிய வந்தது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications