முல்லைப் பெரியாறுக்கு தேசிய பேரிடர் குழுவை அனுப்பும் மத்திய அரசு முடிவுக்கு ஜெ. கடும் கண்டனம்

இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில்,
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், விபத்து கால செயல்திட்டம் ஒன்றை வகுக்க, வல்லுனர்கள் குழு ஒன்றை அமைத்து கடந்த 12-ம் தேதி உத்தரவு ஒன்றை பிறப்பிக்கபட்டுள்ளது.
அணை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. உச்ச நீதிமன்றம் அமைத்த அதிகாரம் பெற்ற உயர்மட்ட குழு, அணையின் நிலை குறித்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், முல்லைப் பெரியாறு மற்றும் நீர்ப் பிடிப்பு பகுதிகளுக்கான தற்காலிக செயல் திட்டம் ஒன்றை தயாரிக்க, வல்லுனர் குழுவை ஏற்படுத்தக் கோருவது சரியானதாகவும், நியாயமானதாகவும் இருக்க முடியாது.
எனவே அணை விவகாரத்தில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தலையிடுவதை அனுமதிக்க முடியாது. இது கேரளாவின் நெருக்குதலுக்குப் பணியும் செயலாக கருதப்பட முடியுமே தவிர வேறு ஒன்றும் இல்லை.
உச்சநீதிமன்றக் குழுவைப் புறக்கணிக்க இதை கேரள அரசு பயன்படுத்திக் கொள்ளும். மேலும் அணை பாதுகாப்பாக இல்லை என்று உச்சநீதிமன்ற நிபுணர் குழுவுக்கே அழுத்தம் கொடுக்க கேரள அரசு நினைக்கிறது. உங்களது தலைமையில் உள்ள ஆணையம் இப்படி ஒரு உத்தரவைப் பிறப்பித்திருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.
இந்த ஆணையத்தின் உத்தரவை திரும்ப பெற உத்தரவிட வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications