அம்பாசமுத்திரம் தாசில்தார் மர்மச்சாவு
மதுரை: நெல்லை அருகே தாசில்தார் மர்மமான முறையில் இறந்து குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்தியுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் இரா.தமிழ்செல்வி, பொதுச் செயலாளர் இரா.பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்ட தாசில்தாராக பணியாற்றிய எஸ்.தியாகராஜன், டிசம்பர் 24ம் தேதி தச்சநல்லூர் அழகநேரி கிராமம் அருகே உள்ள ரயில் தண்டவாளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடைந்தார். அரசுப் பணியில் உயர் அலுவலர்களால் ஏற்படுத்தப்பட்ட கடும் நெருக்கடி காரணமாக உருவான மன உளைச்சலால் அவரது மரணம் நிகழ்ந்துள்ளதாக தெரிய வருகின்றது.
அரசு துறைகளில் உள்ள லட்சக்கணக்கான காலிப் பணியிடங்களால் ஏற்பட்டுள்ள பணிச்சுமை காரணமாக ஒட்டு மொத்த அரசு ஊழியர்களும் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகி வருகின்றனர்.
ஏற்கனவே உள்ள பணிச் சுமையோடு அரசு அறிவிக்கும் புதிய திட்டங்களால் மேலும், பணி சுமை அதிகரிக்கின்றது. இதன் காரணமாக அரசு ஊழியர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன.
எனவே அகால மரணமடைந்த தாசில்தார் எஸ்.தியாகராஜன் மரணம் குறித்து உடனே தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும் என்றும், அரசுத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications