நதிகள் தேசியமயமான பின் மீண்டும் தமிழனாக பிறப்பேன்-அதிமுக தொண்டரின் உருக்கமாஈன கடிதம்!
தேனி: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்திற்காக தற்கொலை செய்து கொண்ட அதிமுக தொண்டர் ராமமூர்த்தி உருக்கமான கடிதம் எழுதி வைத்துள்ளார்.
இதுகுறித்து ராமமூர்த்தி எழுதி வைத்துள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:
சீலையம்பட்டியை சேர்ந்த சேகர் முல்லை பெரியாறு அணை பிரச்சினைக்காக உயிர் தியாகம் செய்துள்ளார். இதை தொடர்ந்து நானும் உயிரை துறக்கிறேன். முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கூறியதுபோல நதிகளை தேசியமயமாக்க வேண்டும்.
முல்லை பெரியாறு அணை பிரச்சினைக்காக 5 மாவட்டங்களில் சைக்கிள் யாத்திரை செல்ல இருந்தேன். கேரள அரசின் வரம்பு மீறிய செயல்களால் நமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுவிடுமோ என பயந்து எனது உயிரை துறக்கிறேன்.
இந்த பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட நானே கடைசி உயிர் பலியாக இருக்க வேண்டும் என அரசு கோரிக்கை விடுக்கிறேன். நதிகளை தேசிய மயமாக்கப்பட்ட பின்னர் மீண்டும் இந்த பூமியில் தமிழனாக பிறப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறியுள்ளார் ராமமூர்த்தி.
முல்லை பெரியாறு அணை பிரச்சினைக்கு தீர்வு காண கோரி தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள சீலையம்பட்டியை சேர்ந்த அ.மு.தி.க. பேச்சாளர் சேகர் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு விருத்தாசலத்தில் விஷம் குடித்து இறந்தார்.
அதேபோல கடந்த வாரம் தேனியை சேர்ந்த பாலத்துராஜா, ஜெயபிரகாஷ் நாராயணன் ஆகியோர் தீக்குளித்தனர். அவர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் அதிமுகவைச் சேர்ந்த ராமமூர்த்தி உயிர் நீத்துள்ளார்.
சின்னமனூரில் நேற்று கேரள அரசை கண்டித்து 20 ஆயிரம் பேர் பங்கேற்ற பிரமாண்ட பேரணி நடந்தது. இதில் கஸ்பா ரோட்டை சேர்ந்த ராமமூர்த்தியும் கலந்து கொண்டார். பேரணியின்போது இவர் மயங்கி விழுந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் விசாரித்தபோது விஷம் குடித்து விட்டதாக கூறினார் ராமமூர்த்தி.
உடனே அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் ராமமூர்த்தி சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
மூன்று அண்ணன்கள், ஒரு தங்கையுடன் பிறந்த ராமமூர்த்திக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் ராமமூர்த்தியின் உடல் சின்னமனூரில் அடக்கம் செய்யப்பட்டது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications