தென் மாவட்டங்களில் ஜாதிக் கலவரத்தைத் தூண்ட சதி?- சர்ச்சை வாசகத்தால் பதட்டம்!
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே மண்டலமாணிக்கம் என்ற கிராமத்தில், ஒரு குறிப்பிட்ட சமூகத் தலைவர் குறித்து அவதூறான வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. தென் மாவட்டங்களில் ஜாதிக் கலவரத்தைத் தூண்டும் சதிச் செயலாக இது பார்க்கப்படுகிறது. இதையடுத்து அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
போத்தநதி என்ற பஸ் ஸ்டாப் சுவரில் குறிப்பிட்ட சமூகத் தலைவர் குறித்து அவதூறான வாசகத்தை யாரோ விஷமிகள் கரியால் எழுதியிருந்தனர். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்து போலீஸார் விரைந்து வந்தனர்.
மேலும் மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் ராய், எஸ்.பி. காளிராஜ் மகேஷ்குமார் ஆகியோர் இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக் கொண்டு அதிகாரிகளை அனுப்பி வைத்தனர். உடனடியாக அந்த சர்ச்சை வாசகங்கள் அழிக்கப்பட்டன.
உடனடியாக மண்டலமாணிக்கம் உள்பட கமுதி சுற்றுவட்டார கிராமங்களில் போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர். தென் மாவட்டங்களில் ஜாதிக் கலவரத்தைத் தூண்டும் செயலாக இது பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications