தீவிரவாதிகளின் 'குண்டுகளை' சமாளிக்க ரூ. 2400 கோடியை களமிறக்கும் டிஆர்டிஓ!

முன்பு கத்திச் சண்டை போட்டார்கள். பிறகு துப்பாக்கியை எடுத்துச் சுட்டார்கள், பின்னர் பீரங்கியால் பிளந்தெடுத்தார்கள். அதுவும் போய் அதிநவீன துப்பாக்கிகள், குண்டுகள் வந்தன. இப்போது அணு குண்டு காலம். அதுவும் கூட அட்வான்ஸ் ஆகி உயிரி ஆயுதங்கள், ரசாயண ஆயுதங்கள் வந்து விட்டன. மனித குண்டுகளும் பிரபலமாகி விட்டன.
இந்த நிலையில் பாகிஸ்தான் போன்ற சட்டத்தின் ஆட்சி சரிவர இல்லாமல் நடக்கும் நாடுகளில் குவித்து வைக்கப்பட்டுள்ள அணு ஆயுதங்கள் தீவிரவாதிகளின் கைகளுக்குப் போகும் அபாயம் பெரிதாகவே உள்ளது. இப்படிப்பட்ட நாடுகளிலிருந்து கசியும் அணு ஆயுதங்கள் தீவிரவாதிகளின் கைகளுக்குப் போய் அவர்கள் தங்களுக்குப் பிடிக்காத இந்தியா போன்ற நாடுகளைத் தாக்கக் கூடிய வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன.
இந்தநிலையில் இப்படிப்பட்ட அபாயகரமான சூழலை சமாளிக்கும் நடவடிக்கைகளில் இந்திய பாதுகாப்புத்துறை இறங்கியுள்ளது. அதில் ஒரு பகுதியாக ரூ. 1200 கோடி அளவில் அதி நவீன சாதனங்கள் பலவற்றை இந்திய பாதுகாப்புத்துறை நமது படையில் சேர்த்துள்ளதாம். மேலும் ரூ. 1200 கோடி அளவில் மேலும் பல சாதனங்களை சேர்க்கப்படவுள்ளது.
டோசிமீட்டர்கள், ஆட்டோஜெக்ட் இன்ஜெக்டர்கள், முதலுதவி சாதனங்கள், நெர்வ் ஏஜென்ட் டிடெக்டர்கள், போர்ட்டபிள் கேஸ் குரோமோட்டோகிராப், சுவாச முகமூடிகள், சூட்கள், ரோன்ட்ஜெனாமீட்டர்கள், என்பிசி இன்டகிரேட்டட் பீல்ட் ஷெல்டர்கள், டிகன்டாமினேஷன் சிஸ்டம் என இந்த அதி நவீன சாதனங்களின் வரிசை நீள்கிறது. இந்த சாதனங்களுக்கு என்பிசி (Nuclear, Biological and Chemical warfare) போர் சாதனங்கள் என்று பெயர்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா முழுமைக்கும் இதுபோன்ற சாதனங்களை சேர்க்க ரூ. 10,000 கோடி செலவாகும் என்று டிஆர்டிஓ மதிப்பிட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலானவற்றை டிஆர்டிஓவே வடிவமைத்துள்ளது.
இதுகுறித்து டிஆர்டிஓ தலைமை கட்டுப்பாட்டு அதிகாரி டாக்டர் டபிள்யூ. செல்வமூர்த்தி கூறுகையில், தற்போது பாதுகாப்புப் படையில் சேர்க்கப்பட்டுள்ள என்பிசி பாதுகாப்பு சாதனங்களில் 85 சதவீதம் டிஆர்டிஓவின் தயாரிப்பாகும். பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் 60 தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் நிறுவனங்களில் இவை தயாரிக்கப்பட்டவை என்றார்.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications