சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை ஏற்கக் கோரி கேரள முதல்வருக்கு 10,000 கடிதங்கள்: கோவை மாவட்ட ஜமாஅத் முடிவ
கோவை: முல்லைப் பெரியாறு பிரச்சனையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை ஏற்று செயல்படுமாறு கேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கு 10,000 கடிதங்களை கோவை மாவட்ட அனைத்து ஜமாஅத் சார்பில் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து கோவை மாவட்ட அனைத்து ஜமாஅத் பொதுச் செயலாளர் முஹமது அலி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள மக்களிடம் தேவையில்லா அச்சத்தை ஏற்படுத்தி, அணையை அழிக்க, கேரளத்தின் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் ஒற்றுமையுடன் ஓரணியில் திரண்டுள்ளனர். இதற்கு கோவை மாவட்ட அனைத்து ஜமாஅத் கடும் கண்டனம் தெரிவிக்கிறது.
இவர்கள் தமிழகத்தின் தண்ணீர் தேவையையோ, மாநிலங்களுக்கு இடையேயான நடைமுறை ஒப்பந்தங்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்பதைப் பற்றியோ சிறிதும் சிந்திக்கவில்லை. மாறாக தர்மத்தையும், உச்ச நீதிமன்ற தீர்ப்பினையும் உதாசீனப்படுத்தி புதிய அணை கட்டுவோம் என விதண்டாவாதம் செய்கின்றனர்.
கேரள அரசின் இந்த செயல்பாடுகளால் இரு மாநில மக்களும், வாழ்க்கை முறை மற்றும் வணிகத்துறையில் பெரும் இடர்பாடுகளும், இன்னல்களும் அனுபவித்து வருகின்றனர்.
எனவே, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுப்பட்டு நடக்கக் கோரி கேரள முதல்வர் உம்ம ன்சாண்டிக்கு 10,000 கடிதங்கள், மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் அனுப்பிவைக்கப்படும்.
இப்பிரச்னையில் மத்திய அரசும், பிரதமரும் உடனே தலையிட்டு தீர்வு காணவேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications